ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் தீப்பிடித்த அப்காய்க் எண்ணெய் ஆலை 
உலகம்

சவூதி எண்ணெய் ஆலைகள் 3 வாரங்களில் மீண்டும் முழு இயக்கம்

எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

DIN

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அண்டை நாடான யேமனில் இயங்கி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர். தாக்குதலுக்குள்ளான அப்காய்க் ஆலை, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையாகும். மேலும், குராயிஸ் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல், சவூதி அரேபியாவின் மிக முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றாகும்.

இதையடுத்து, அராம்கோவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அராம்கோவின் உற்பத்தி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருவதால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி மீண்டும் முழு வீச்சில் தொடங்கி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

மெட்ரோ கட்டுமானப் பணிகள்: இன்று முதல் தில்லி லுட்யன்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்து மூடல்

SCROLL FOR NEXT