உலகம்

பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 26 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் மலை மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கில்ஜித்-பலிஸ்தான் பகுதியைச் சேர்ந்த ஸ்கார்டு நகரிலிருந்து ராவல்பிண்டியை நோக்கி 40 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, பாபுசார் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
மலைப் பாதை வளைவில் அந்தப் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்து அது மலை மீது மோதியது.
இதில், சிறுவர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT