உலகம்

உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

DIN

நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

இதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அந்தந்த நாடுகளுடனான நட்புறவு, முதலீடு உள்ளிட்ட புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடத்தினார். 

கதார் அரசர் தமிம் பின் ஹமத் அல் தனி, ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டி, பூடான் பிரதமர் லோடாய் செரிங், கொலம்பிய அதிபர் இவன் மார்க்யூஸ், நைகர் அதிபர் முஹமது இஸோஃபூ, இத்தாலி பிரதமர் கைஸப்பீ கான்டே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முஹமது சோலி, நமீபிய அதிபர் ஹாகே கெயங்காப் ஆகியோருடன் இச்சந்திப்பு நடைபெற்றது.

அதுமட்டுமல்லாமல், யூனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரேவைச் சந்தித்து இந்தியாவில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT