உலகம்

சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை

IANS

பெய்ஜிங்: சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 47,249 பேர் இந்த வைரஸ் பாதிப்பிண் காரணமாக் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் வூஹான் மாகாணத்தில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் சந்தை ஒன்றில் இருந்துதான் கரோனா வைரஸ், மிருகங்களிடம் இருந்து மனிதனுக்குப் பரவியுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து உடனடியாக வன விலங்குகள் விற்பனை மற்றும் உட்கொள்ளுதலுக்குத் தடை விதித்து சீன அரசாங்கம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்ஷேன் மாகாண அரசு வெளியிட்டுள்ள தகவலில், ‘நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டும்தான் மற்ற விலங்குகளை விட மனிதனிடம் நெருக்கமாகப் பழகுகின்றன. எனவே அதன்மூலம் நோய் பரவலைத் தடுக்க இந்தத் தடை அவசியமாகிறது. அத்துடன் மனிதப் பண்பாடு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக இத்தடை அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT