கரோனா: உலகளவில் பலி எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம்கரோனா: உலகளவில் பலி எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகின் 203 நாடுகளில் 9.61 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் கொவைட்-19 எனப் பெயரிடப்பட்ட அந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 49,000-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.
அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சதுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகிலேயே மிக அதிகமாக கரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.