ஈரான் தாக்குதலுக்கு அஜர்பைஜான் எச்சரிக்கை!
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக ஈரானுக்கு அஜர்பைஜான் எச்சரிக்கை
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அஜர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் ட்ரோன்கள், எல்லைதாண்டி அஜர்பைஜான் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஜர்பைஜானின் எக்ஸ்க்ளேவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, "அஜர்பைஜான் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும், இது சர்வதேச அளவில் பதற்றங்களை அதிகரிக்கவும் செய்கிறது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தி, விளக்கமளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளதாகவும் அஜர்பைஜான் கூறியுள்ளது.
Azerbaijan says two people injured by Iranian drones
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.