ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 440 பேர் பலி
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:00 PM
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் உள்ளது.
இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் பலியாகியிருப்பதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 22,157 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 4,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் அங்கு கரோனாவல் பாதித்தோர் எண்ணிக்கை 2,13,024ஆக உயர்ந்துள்ளது.