முகப்பு
உலகம்

கரோனா: புதிய பணி வாய்ப்புகளை நிறுத்தி வைத்தது கூகுள்

 அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், புதிதாக முழு நேர மற்றும் ஒப்பந்தப் பணி வாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2020 at 1:31 PM
google071343
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:01 PM


மாஸ்கோ: அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், புதிதாக முழு நேர மற்றும் ஒப்பந்தப் பணி வாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

வழக்கமாக ஒதுக்கப்படும் சந்தை நிதியை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கூகுள் நிறுவனங்களில் பொதுவான செலவின நிதி குறைப்பு மற்றும் புதிதாக பணி வாய்ப்புகளை ஏற்படுத்துவது நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளன.

Advertisement

கரோனா தொற்று பரவல் பெரிய அளவில் பொருளாதா இழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கூகுள் சில முக்கிய முதலீடுகளை இந்த மாத இறுதி வரை நிறுத்திவைக்க திட்டமிட்டிருப்பதாக ஏப்ரல் மாதத் துவக்கத்திலேயே கூகுள் செயல் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.