முகப்பு
உலகம்

ஆயுள் கைதி முருகனின் தந்தை காலமானார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை இன்று காலை காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
முருகன்
பகிர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை இன்று காலை காலமானார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், வேலூா் மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறாா். 

இதனிடையே முருகனின் தந்தை வெற்றிவேல் (75), புற்றுநோய் காரணமாக இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். 

இதனிடையே தனது தந்தையின் இறுதிச்சடங்கை காணொலி மூலம் பாா்க்க அனுமதிக்க வேண்டும் என்று முருகன் தமிழக அரசுக்கும், சிறைத் துறை நிா்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →