அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவின் ஹூஹானில் பரவத் தொடங்கிய கரோனா உலகம் முழுவதும் 210 நாடுகளுக்குப் பரவி மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து வருகின்றது.
புதன்கிழமை காலை நிலவரப்படி அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,266 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,500 பேர் பலியாகியுள்ளனர்.
தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மொத்தம் அந்த நாட்டில் 1,035,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் 1,42,238 பேர் குணமடைந்துள்ளனர்.