முகப்பு
உலகம்

சிங்கப்பூரில் புதிதாக 908 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் புதிதாக 908 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
Singapore reports 908 COVID-19 infections
பகிர்:

சிங்கப்பூரில் புதிதாக 908 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் மொத்த பாதிப்பு 54,254 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மூலம் பெரும்பாலான தொற்று பரவி வருவதாகவும், வரவிருக்கும் நாள்களில் தினசரி பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிக்கப்பட்ட 47,454 பேர் தொற்று நோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.