அமெரிக்க அதிபர் தேர்தல்: அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 அதிபர் வேட்பாளராக ஜோ பிடனை ஜனநாயகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 அதிபர் வேட்பாளராக ஜோ பிடனை ஜனநாயகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளருக்கான தோ்வில் ஜோ பிடன் வெற்றி பெற்றாா். அவருக்கு ஆதரவாக 79.5 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது.
ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக லூசியானாவில் நடைபெற்ற போட்டியிலும் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், விஸ்கான்ஸன் மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதிபா் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிடனுக்கு 3,558 பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ள ஜோ பிடன், “அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி. அமெரிக்காவின் அதிபருக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.