முகப்பு
விவசாயிகள் போராட்டம்(கோப்புப்படம்)
உலகம்

'விவசாயிகளின் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் தலையிடாது'

தில்லியில் நடைபெறும் போராட்டக்களத்திலிருந்து விலகியிருக்க  எதிர்கட்சித் தலைவர்கள்  ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. 

உலகம்

'விவசாயிகளின் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் தலையிடாது'

தில்லியில் நடைபெறும் போராட்டக்களத்திலிருந்து விலகியிருக்க  எதிர்கட்சித் தலைவர்கள்  ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
விவசாயிகள் போராட்டம்(கோப்புப்படம்)
பகிர்:

தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து விலகியிருக்க எதிர்கட்சித் தலைவர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் விலகியிருக்கவும் முடிவு செய்துள்ளன. 

விவசாயிகள் ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு கட்சியையும் போராட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தூண்டுதலினாலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காகவே விவசாயிகளின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன போன்ற விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. எனினும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி, 'போராட்டத்தில் இருந்து விலகியிருக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஏனெனில், விவசாயிகள் அரசியல் கட்சி சாராது தனித்து போராட்டம் நடத்தவே விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தனர். எனவே, இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்த முடிவை எடுத்துள்ளன. 

இருப்பினும், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒற்றுமையுடன் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இதில் கட்சி சார்ந்து யாரும் கலந்துகொள்ளப்போவதில்லை. வெளியில் இருந்து நாங்கள் விவசாயிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, விவசாயிகளின் போராட்டம் முற்றிலும் அரசியல் சாராதது என்றும், போராட்டக்களங்களில் அரசியல் தலைவர்கள் யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறிய சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் செய்ய வேண்டாம் என்ற நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →