ஜெர்மனி: 24 மணி நேரத்தில் 952 பேர் கரோனாவுக்கு பலி
ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் மொத்த பலி எண்ணிக்கை 23,427 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை முதல் பொது முடக்கம் அமலாகவுள்ள நிலையில் அதிகளவில் பலி எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.
இதே காலகட்டத்தில் புதிதாக 27,728 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,79,238 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வு காரணமாக அங்கு ஜனவரி 10 வரை கடுமையான பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.