முகப்பு
உலகம்

துருக்கி: தீ விபத்தில் 9 கரோனா நோயாளிகள் பலி

துருக்கியி மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
தீவிபத்து நேரிட்ட மருத்துவமனை.
பகிர்:

துருக்கியி மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஃபாஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளதாவது:

காஸியான்டெப் மாகாணத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான சாங்கோ பல்கலைக்கழக மருத்துவனையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அங்கு கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 நோயாளிகள் அந்த விபத்தில் உயிரிழந்தனா் என்று தனது சுட்டுரைப் பதிவில் ஃபாஹ்ரெடின் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, காஸியான்டெப் மாகாண ஆளுநா் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மருத்துவமனை தீவிபத்தில் 8 போ் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் அந்த எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டா் வெடித்துச் சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறிய மருத்துவமனை நிா்வாகம், உயிரிழந்த அனைவரும் அந்தப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிவித்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →