முகப்பு
உலகம்

தென்கொரியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று

தென்கொரியாவில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Updated On : 25 டிசம்பர், 2020 at 12:43 PM
கோப்புப்படம்
பகிர்:

தென்கொரியாவில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தென்கொரியாவில் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,241 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,770-ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

மேலும், 17 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில் இதுவரை 773 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 623 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 38,048 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 69.47 சதவீதமாக உள்ளது. இதுவரை அந்நாட்டில் 3,72,7,798 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.