முகப்பு
உலகம்

எகிப்து மருத்துவமனையில் தீ: 7 கரோனா நோயாளிகள் பலி

எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

எகிப்து மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள ஓபரில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இதில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கரோனா நோயாளிகள் பலியாகினா்; 5 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களும் மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவா்களும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்துப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →