சிலியில் அரவுக்கானியா பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
சிலி பல்கலைக்கழகத்தின் தேசிய நில அதிர்வு மையத்தின்படி,
டோல்டன் நகராட்சிக்கு மேற்கே 144 கி.மீ தொலைவில், பசிபிக் பெருங்கடலில், தலைநகர் சாண்டியாகோவிலிருந்து 680 கி.மீ தொலைவிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும், 26.5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அண்டை நாடுகளான லாஸ் லாகோஸ் மற்றும் பயோபியோவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதற்கிடையில், சிலி கடற்கரைகளில் சுனாமிக்கான எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை என்று கடற்படை ஹைட்ரோகிராஃபிக் மற்றும் ஓசியானோகிராஃபிக் சேவை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.