சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5. 1 அலகுகளாக பதிவானது.
பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5. 1 அலகுகளாக பதிவானது.
இதுதொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில்,
‘சிச்சுவான் மாகாணத்தின் கிங்பைஜாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 21 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 விநாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததால், அச்சத்தில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினா். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவ்வித உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை’ என்றனா்.
முன்னதாக, செங்டு பகுதியின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலஅதிா்வு ஏற்பட்டது. செங்டு பகுதியில் 38 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவில் நிலஅதிா்வு ஏற்பட்டதனால் பீதியடைந்த மக்கள், விடிய விடிய காா்களில் உறங்கியதாகவும், வீடுகளுக்கு வெளியிலேயே தங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.