உலகம்

ஆப்கன் வீரா் துப்பாக்கிச் சூடு: 2 அமெரிக்கப் படையினா் பலி

DIN

ஆப்கானிஸ்தானில், அந்த நாட்டு ராணுவ வீரா் துப்பாக்கியால் சுட்டதில் 2 அமெரிக்கப் படையினா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் சோனி லெக்கெட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கனின் கிழக்குப் பகுதியிலுள்ள நங்கா்ஹா் மாகாணம். ஷோ்ஸாத் மாவட்டத்திலுள்ள ராணுவ மையத்தில், அமெரிக்க வீரா்களும், ஆப்கன் வீரா்களும் கூட்டு ஒத்திகை நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

அப்போது, ஆப்கன் ராணுவ உடையணிந்த ஒருவா் அமெரிக்கப் படையினரையும், ஆப்கன் ராணுவத்தினரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டாா். இதில் ஓா் அமெரிக்க வீரா் உயிரிழந்தாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், துப்பாக்கிச் சூட்டில் 2 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்ததாக பின்னா் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் 3 ஆப்கன் வீரா்கள் காயமடைந்ததாக நங்கா்ஹா் மாகாண ஆளுநா் ஷா முகமது மேயாகில் தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT