உலகம்

சிறுவர்களுக்கு எதிரான ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட 43 பேர் கைது

IANS

சிறுவர் ஆபாசத்திற்கு எதிரான பெரிய அளவிலான நடவடிக்கையில் 43 பேரை பிரேஸில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரேஸில் அதிகாரிகளின் கூற்றுப்படி, பெடரல் காவல்துறையில் 119 தேடல் வாரண்டுகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 579 சட்ட அமலாக்க அதிகாரிகள் பங்கேற்றனர்.

சாவோ பாலோ, சாண்டா கேடரினா, பரானா மற்றும் மாடோ க்ரோசோ டோ சுல் உள்ளிட்ட 12 பிரேஸில் மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை இந்த வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேஸிலில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான சாவ் பாலோவில் 19 பேர் கைது செய்யப்பட்டனர், அதன்பின்னர் சாண்டா கேடரினா ஒன்பது பேரும், பரணாவில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்கா, கொலம்பியா, பனாமா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க முகமைகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன மற்றும் அவற்றின் பிராந்தியங்களில் வாரண்டுகளை நிறைவேற்றின.

சிறுவர் ஆபாசங்களை தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 43 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஒவ்வொரு குற்றத்திற்கும் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பகுப்பாய்விற்காக 187,000 க்கும் மேற்பட்ட கோப்புகள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் முதல் கட்டம் 2017-இல் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை மொத்தம் 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT