உலகம்

உச்சகட்ட உஷார் நிலையில் வெள்ளை மாளிகை

ஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

ஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் உடனான போர் பதற்றத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, ஆங்காங்கே ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, இராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அல் ஆசாத் மற்றும் இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணைகளை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT