முகப்பு
உலகம்

மெக்சிகோவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 679 பேர் பலி: சுகாதாரத் துறை

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 679 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 3 ஜூலை, 2020 at 1:10 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 679 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,189 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோயியல் இயக்குநர் ஜோஸ் லூயிஸ் அலோமியா தெரிவித்தார். 

ஒரு நாள் முன்னதாக 6,741 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 2,38,511 ஆக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் 5,681 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில்  741 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. 

உலகளவில் இதுவரை கரோனா தொற்றுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 10,99,1872 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்க்கு 5,24,175-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.