பீடபூமியில் 100 கிலோ எடையுடைய பூசணிக்காய்
கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரமுள்ள திபெத்தின் ஆலி பிரதேசத்தில் யாங் மோ லூ என்ற விவசாயி, 11 ஆண்டுகளாக பழம் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு வருகின்றார்.
கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரமுள்ள திபெத்தின் ஆலி பிரதேசத்தில் யாங் மோ லூ என்ற விவசாயி, 11 ஆண்டுகளாக பழம் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு வருகின்றார்.
கடந்த ஆண்டில் 70 கிலோ எடையுள்ள பூசணிக்காயை அறுவடை செயத அவர், இவ்வாண்டில் 100 கிலோ எடையுள்ள பூசணிக்காயை அறுவடை செய்யவுள்ளார்.
உயர்ந்து வரும் காய்கறி விலை உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்த்து, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், ஆலி பிரதேச அரசு 2011 ஆம் ஆண்டில் உயிரின வேளாண்மை தொழில் மண்டலத்தை நிறுவியது. அதில் ஏழை மக்கள் பலர் பயிற்சி பெற்று வேலை செய்து வருவதன் வழி வறுமையிலிருந்து மீண்டு வருகின்றனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்