முகப்பு
உலகம்

இந்திய சைக்கிளை ஓட்டி சுகாதார இயக்கத்தைத் தொடக்கிவைத்த பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய சைக்கிளை ஓட்டி புதிய சுகாதாரத் இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
பகிர்:

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய சைக்கிளை ஓட்டி புதிய சுகாதாரத் இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியத் தயாரிப்பான ஹீரோ சைக்கிளை ஓட்டி புதிய ஜிபிபி 2 பில்லியன் சைக்கிள் ஓட்டுதல் இயக்கத்தை தொடங்கிவைத்தார். இது கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கையில் உடல் பருமன் குறைப்பில் ஒரு பகுதியாகும். 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உடல் பருமனைக் குறைக்க சைக்கிள் ஓட்டும் இயக்கத்தை பிரதமர் ஜான்சன் தொடங்கி வைத்துள்ளார்.

செவ்வாயன்று பிரிட்டனில் நாட்டிங்ஹாமில் உள்ள பீஸ்டனில் இந்திய சைக்கிள் நிறுவனத்தின் ஹீரோ வைகிங் புரோவில் சவாரி செய்த அவர் "மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதிலும் நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன" என்று கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனாவால் பாதிக்கப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →