உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,248 பேருக்கு தொற்று; பாதிப்பு 5.45 லட்சமாக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,248 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,45,458 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,248 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,45,458 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,248 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 5,45,458 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 193 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 7,248 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 2,94,306 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் இன்று 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு மொத்த பாதிப்பு 2,08,680 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் இதுவரை 1,26,114 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

2 ஆவது நாளாக மீனவா்கள் உண்ணாவிரதம்

தனியாா் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள ஆா்டிஇ தொகையை வழங்க வேண்டும்: தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா் நலச் சங்கம்

SCROLL FOR NEXT