உலகம்

நெருக்கடி சூழலில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய ஐந்து தூதரக அதிகாரிகள்!

ANI

அம்ரித்சர்: கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து இந்திய தூதரக அதிகாரிகள் திங்களன்று பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரை, போலியான குற்றசாட்டுகளின் பேரில் கடந்த 15-ஆம் தேதியன்று பாகிஸ்தானிய உளவு நிறுவனங்கள் பிடித்துச் சென்று  10 மணி நேரத்திற்கு மேலாக துன்புறுத்தியதாக, இந்திய வெளியுறவுத்  துறை குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக  அதிகாரி சையத் ஹைதர் ஷாவை அழித்து கடும் கண்டனங்களை பதிவு செய்தது.

இந்நிலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து இந்திய தூதரக அதிகாரிகள் திங்களன்று பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஐவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லைப்பகுதி வழியாக, சாலை மார்க்கமாக இந்தியா வந்து  சேர்ந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT