காயம்பட்ட சிங்கங்கள்..! சிஎஸ்கே கேப்டனின் வாக்குறுதி!
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருப்பதாவது...
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “காயம்பட்ட சிங்கள் அச்சுறுத்தலானது” என நேர்காணலில் பேட்டி அளித்துள்ளார்.
சிஎஸ்கே அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறாமல் இருந்தன. குறிப்பாக கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்து ரசிகர்களிடம் மிகுந்த விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கடைசியாக தோனி தலைமையில் 2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. பின்னர், கடந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேற, பாதியில் தோனி கேப்டனாக பொறுப்பேற்று சில போட்டிகளில் வென்றார்.
Advertisement
Advertisement
சிஎஸ்கே அணியின் யூடியூப் பக்கத்தில் முன்னாள் வீரர் அபினவ் முகுந்திடம் அளித்த பாட்காஸ்ட் உரையாடலில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியிருப்பதாவது:
தனிப்பட்ட முறையில் கடந்த சீசனில் எனக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது. அணிக்கும் சரி ரசிகர்களுக்கும் மோசமான சீசனாக அமைந்துவிட்டது. இந்த சீசன் நாங்கள் காயம்பட்ட சிங்கங்களாக இருக்கிறோம். சிங்கத்தின் கர்ஜனையை விட அமைதி மிகவும் பயங்கரமானது என்றார்.
Wounded Lions..! CSK Captain's Promise to fans!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.