ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி ரஷியாவிலுள்ள 83 பிராந்தியங்களில் புதிதாக 6,791 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,198 பேருக்கு (32.4 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,34,437 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 104 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 9,073 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,99,087 பேர் குணமடைந்துள்ளனர்.