கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300 ஆனது: உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 3,300 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவா: உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 3,300 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் புதிதாக 2,873 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சீனாவில் 80,711 பேர் உட்பட உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மட்டும் சீனாவில் 28 பேர் உயிரிழந்தனர். 99 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இத்தாலியில் மட்டும் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இத்தாலியில் உயிரிழப்பு 196 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,916 ஆக உயர்ந்துள்ளது.