கோப்புப்படம் 
உலகம்

கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300 ஆனது: உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 3,300 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

IANS


ஜெனிவா: உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 3,300 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் புதிதாக 2,873 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சீனாவில் 80,711 பேர் உட்பட உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டும் சீனாவில் 28 பேர் உயிரிழந்தனர். 99 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் மட்டும் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இத்தாலியில் உயிரிழப்பு 196 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,916 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

எஸ்.ஐ. தேர்வு: திமுக அரசின் 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கைதானா? - இபிஎஸ் கேள்வி

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

SCROLL FOR NEXT