உலகம்

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா; பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

DIN

சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டினர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,410 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. சுமார் 1,457 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது என்றும் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 4,800 இந்தியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டினருக்கான தங்குமிடங்களில் வசித்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT