சிங்கப்பூரில் மேலும் 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டினர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,410 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. சுமார் 1,457 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது என்றும் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 4,800 இந்தியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டினருக்கான தங்குமிடங்களில் வசித்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.