லாட்டரியில் பரிசு 
உலகம்

கரோனா ஊரடங்கில் வேலை இழந்தவருக்கு லாட்டரியில் ரூ. 47 கோடி பரிசு!

கரோனா ஊரடங்கில் வேலை இழந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, லாட்டரியில் இந்திய மதிப்பில்  ரூ. 47 கோடி பரிசு கிடைத்துள்ளது.

IANS

வெலிங்க்டன்: கரோனா ஊரடங்கில் வேலை இழந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, லாட்டரியில் இந்திய மதிப்பில்  ரூ. 47 கோடி பரிசு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக நியூசிலாந்தின் ‘ஸ்டப்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரைச் சேர்ந்த ஒருவர் இந்த கரோனா ஊரடங்கின் காரணமாக தான் செய்து வந்த வேலையை இழந்து சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது மனைவி அந்நாட்டு சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். வேலையில் இருந்த சமயத்தில், அவர் அந்நாட்டில் இணையதள லாட்டரி நடத்தும் ‘லாட்டோ’ நிறுவனத்தில் இருந்து லாட்டரி எண் ஒன்றைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள குலுக்கல் முடிவில் அந்த நபருக்கு அந்நாட்டு மதிப்பில் 10.3 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 47 கோடி ரூபாய்) பரிசாகக் கிடைத்துள்ளது. இதனால் அவரும் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பரிசுத்தொகை தற்போது வங்கியில் அவர்கள் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை அடையாளம் வெளியிடப்படாத அந்த தம்பதியினர் இந்தப் பரிசின் காரணமாக தங்கள் வாழக்கை நிலையில்  பெரிதாக எதையும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும், எப்போதும் போல இருக்கவும், இயன்ற வரை பிறருக்கு உதவவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT