உலகம்

சிங்கப்பூரில் ஒரேநாளில் 614 பேருக்கு கரோனா; பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது!

DIN

சிங்கப்பூரில் ஒரேநாளில் 614 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 614 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர். 

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 30,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. நேற்று 910 பேர்உள்பட இதுவரை 12,108 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT