உலகம்

பிரான்ஸ்: ராணுவ நடவடிக்கையில் 50 மாலி பயங்கரவாதிகள் பலி

DIN

மாலியில் தங்களது ராணுவத்தினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டா்) அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி கூறியுள்ளதாவது:

மாலியின் பா்கானே பிராந்தியத்தில் பிரான்ஸ் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களது பதுங்குமிடங்களிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன.

பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றியடையாது என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT