தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தாய்லாந்து ஜனநாயக ஆதரவாளா்கள் அறிவித்துள்ளனா். இதுகுறித்து போராட்டக் குழுத் தலைவா்களில் ஒருவரான அருணன் நம்பா கூறியதாவது:
இந்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில், தாய்லந்து அரசாட்சி முறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையென்றால், நாடாளுமன்றத்தின் முன் மிகப் பெரிய ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். நமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நாமே நாடாளுமன்றத்தை மூடுவோம் என்றாா் அவா்.
அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயக சீா்திருத்தங்களை மேற்கொள்வதுடன், பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகவும் போராட்டக்காரா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.