சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: பலி 8 ஆக உயர்வு
வடமேற்கு சீனாவின் சான்ஸ்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு சீனாவின் சான்ஸ்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் டோங்சுவான் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி திடீரென வாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் 42 பேர் பணி மேற்கொண்டிருந்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் 34 சுரங்க பணியாளர்களைப் பத்திரமாக மீட்டனர். விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து 4 பேர் மாயமானார்கள். அவர்களின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.