அமெரிக்காவில் 2,50,000-ஐ தாண்டியது கரோனா பலி
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு இடையே, கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு, மீண்டும் மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்ததைப் போல, அந்த நாட்டில் மூன்றாவது கரோனா அலை எழுந்துள்ளது.
தினமும் லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐ தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,707 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,56,254 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்புப் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.