முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒரேநாளில் அதிக பாதிப்பு: புதிதாக 2,738 பேருக்கு தொற்று

பாகிஸ்தானில் ஒரேநாளில் அதிக அளவாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 20 நவம்பர், 2020 at 5:23 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

பாகிஸ்தானில் ஒரேநாளில் அதிக அளவாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில், கரோனா தொற்று மீண்டும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் புதிதாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் பதிவான அதிக பாதிப்பாகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,542ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7,561ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

தற்போதைய நிலவரப்படி 32,005 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,517 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 3,27,542 பேர் மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.