உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 
உலகம்

உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் லாகூர் முதலிடம்!

உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

DIN

லாகூர்: உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.க்யூ ஏர் எனப்படும் நிறுவனமானது காற்று தரக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, உலகம் முழுதும் காற்று மாசுபாடுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். காற்று தரக் குறியீட்டு எண்ணானது 50–க்கும் குறைவாக இருந்தால் அதனை திருப்திகரமான அளவாக கணிக்கிறது.

அந்த அடிப்படையில் திங்களன்று பாகிஸ்தானின் லாகூர் நகரானது காற்று தரக் குறியீட்டு எண் 306-ஆக பதிவாகி, உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இந்த அளவானது ‘மிக ஆபத்தானது’ என்று வகைபடுத்தப்படுகிறது. ஏற்கனவே கரோனா தொற்றினை எதிர்கொள்வதில் திணறிவரும் பாகிஸ்தானின் போது சுகாதாரத் துறைக்கு இது பெரும் சிக்கலாகக் கணிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் மற்றொரு நகரான கராச்சி காற்று தரக் குறியீட்டு எண் 168-உடன் பட்டியலில் ஏழாவது இடத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT