உலகம்

ஆப்கன் ராணுவத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 34 ராணுவ வீரர்கள் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். 

கஸ்னி ராணுவத் தளம் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் வெடித்ததில் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

கஸ்னி மாகாண சுகாதாரத் துறைத் தலைவர் ஜாஹிர் ஷா நிக்மலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார். 

ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT