ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,683 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 26,683 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 22,69,316 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,798 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 459 பேர் உள்பட இதுவரை 39,527 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 17,61,457 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,68,332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.