முகப்பு
உலகம்

ஜெர்மனியில் அதிகரிக்கும் கரோனா: இன்று 5,132 பேருக்குத் தொற்று

ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 14 அக்டோபர், 2020 at 11:56 AM
Germany reports 5,132 new Covid cases, tally at 334,585
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:07 PM

ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினசரி பாதிப்பு தொடர்பாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ)புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது, 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,132 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,34,585 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

மேலும் நோய்த் தொற்று பாதித்து 43 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 9,677 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.