அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (கோப்புப்படம்) 
உலகம்

'ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை': அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமக்கு எதிரான பராக் ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமக்கு எதிரான பராக் ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேதலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ''எனக்கு எதிரான ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை. அவர்கள் சரியான முறையில் தங்களது செயல்களை மேற்கொண்டிருந்தால் நான் அதிபராக வென்றிருக்க முடியாது. அவர்கள் கீழ்த்தரமான செயல்களையே செய்து வருகின்றனர். அதனால் தான் நான் அதிபராக உங்கள் முன்பு நிற்கிறேன்'' என்று கூறினார்.   


''ஒபாமா கடந்த முறை ஹிலாரியை விட கடினமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் வெற்றி பெற்றது நான் தான். அதனால் ஒபாமாவின் தற்போதைய பிரசாரத்திற்கு கவலைப்படப்போவதில்லை'' என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT