உலகம்

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: காவலர் பலி 

PTI

உத்தரப் பிரதேசத்தில் சீதாபூர் கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் காவலர் பலியாகியுள்ளார். 

தரியாவ் காவல் நிலையத்தின் கீழ் புதன்கிழமை மாலை நடந்த விபத்தில் காவலர் விஷால் யாதவ் (24) உயிரிழந்தார். டிராக்டரில் உள்ள வெளிச்சம் தரும் விளக்குகள் எரியாததே விபத்துக்குக் காரணம் என்று வட்ட அலுவலர் அனில் குமார் தெரிவித்தார்.

ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பலத்த காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த யாதவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குமார் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT