உலகம்

மியான்மா்: விமானப் போக்குவரத்து முடக்கம்

DIN

மியான்மரில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, விமானப் போக்குவரத்து முடக்கம் உள்பட் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி பீதியை ஏற்படுத்தி வந்த நிலையிலும், மியான்மரில் அந்த நோயின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. எனினும், கடந்த மாதம் அந்த நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் அந்த நோய் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக, இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை மியான்மா் அரசு வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னா் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதியக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக நாட்டில் பொது விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும், தலைநகா் யாங்கூனிலிருந்து யாரும் வெளியூா் செல்வதற்கும், நாட்டின் பிர பகுதிகளிலிருந்து அந்த நகருக்கு பொதுமக்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT