ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 16-வது மாடியில் இருந்து குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஷார்ஜாவின் அல் மஜாஸ் என்ற பகுதியில் ஞாயிறன்று இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 26 வயது பெண்மணி, கட்டடத்தின் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள், இந்த மரணத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.