உலகம்

ஜப்பான் பிரதமராக தேர்வான யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

புது தில்லி: ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே உடல்நலக் குறைவால் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தாா். அதையடுத்து, கட்சியின் புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த வாரம் நடைபெற்றது. தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோஷிஹிடே சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது  சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள பதிவில், “ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹிடே சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நமது சிறப்பான ஆக்கப்பூர்வ மற்றும் உலகளாவிய கூட்டாண்மையுடன், நாம் இருவரும் சேர்ந்து புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT