முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 5,905 பேருக்கு  கரோனா தொற்று; மேலும் 134 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 5,905 பேருக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 134 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 18 செப்டம்பர், 2020 at 1:55 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM

ரஷியாவில் புதிதாக 5,905 பேருக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 134 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 

Advertisement

நாட்டில் புதிதாக 5,905 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,91,186 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் உள்பட இதுவரை 19,061 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 9,01,207 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,70,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.