முகப்பு
உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: ஒரே நாளில் 2,300 பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 2,300 பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 15 ஏப்ரல், 2020 at 10:20 AM
பகிர்:


அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 2,300 பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் உலகளவில் இதுவரை 19,999,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

பலி எண்ணிக்கையில், முதலிடத்திலிருந்த இத்தாலியை அமெரிக்கா முந்தியுள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 26,064 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 2300 பேர் பலியாகியுள்ளனர். 6,14,211 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 38,820 குணமடைந்துள்ளனர். 

இதேபோல், அதிகபட்சமாக இத்தாலியில் 21,067 பேரும், ஸ்பெயினில் 18,255 பேரும் கஜானாவுக்குப் பலியாகி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.