முகப்பு
உலகம்

பிரிட்டனில் மேலும் 329 பேர் பலி: 21 ஆயிரத்தைத் தாண்டியது எண்ணிக்கை

பிரிட்டனில் மேலும் 329 பலியானதையடுத்து அந்த நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2020 at 7:59 PM
கோப்புப்படம்
பகிர்:


பிரிட்டனில் மேலும் 329 பலியானதையடுத்து அந்த நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் பிரிட்டன் உலகளவில் 6-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி அந்த நாட்டில் 24 மணி நேரத்தில் 329 பேர் பலியாகியுள்ளனர். 24 மணி நேரத்தில் பலியாவோரின் எண்ணிக்கையில் கடந்த 4 வாரத்தில் இதுவே குறைந்த எண்ணிக்கையாகும். இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 21,061 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.